அழுகை பற்றிய கவிதைகள் | Quotes about Kanneer in Tamil
யாரிடமும் வெளிபடுத்தாத உணர்வுகளைக் கிறுக்கும் போது, கிறுக்கல்களில் கண்ணீர் கலந்த கவிதை வருகிறது!
கண்ணீர் விட மறுக்கிறேன், கண்களில் இருக்கும் நீ கண்ணீராய்க் கரைந்து விடக் கூடாது என்பதற்காக!
சத்தமிட்டுச் சிரிக்க வைப்பதும், அழுக வைப்பதும் ஒரு சிலரே!
நீ இருந்த வரை ஆனந்தத்தோடு உறக்கம்! நீ விட்டுபோன பின்பு அழுகையோடு உறக்கம்...
என் கண்ணீர் துளிகள் கூட ஒருவகையில் நட்சத்திரம் தான்! அதன் எண்ணிக்கையை யாராலும் எண்ணி முடிக்க முடியாது!
பிறர் கண்களுக்கு மகிழ்ச்சியாக தெரிகின்றவர்களில் பலர், கண்ணீரோடு இரவுகளைக் கழிப்பவர்கள்!
அளவில்லாத அன்பும், அதிகபட்ச ஆசையுமே அழுகைக்கு காரணமாக அமைகிறது!
Tears Quotes in Tamil
கற்பனைகளும் கனவுகளும் கானல் நீராய் மறைந்தன... அதனை சுமந்த கண்களில் கண்ணீரும் நிறைந்தன...
உனக்கான வார்த்தைகள் தேடுகையில் கண்ணீர்த்துளிகள் தான் மிச்சம்...
நான் இருக்கிறேன் உனக்கு துணையாக என்று அடிக்கடி வந்து விட்டு போகிறது - கண்ணீர்!
காண்பவையெல்லம் உண்மை என நம்பிச் சிவந்ததால் என்னவோ வழிகிறது நீர்த்துளி...
Kaneer Quotes in Tamil
கவலையோடும், சோகத்தோடும் இருக்கையில், சொல்லி அழுததை விட, சொல்லாமல் அழுததே அதிகம்!
உன் நினைவுகளின் தாகம் தீர்க்க வற்றாத நீரூற்றாய், என் கண்கள்.
மீளமுடியாத கண்ணீர் அருவியில் என்னை மீட்டெடுக்க முயல்கின்றேன்! நீ இல்லா இரவுகளில்!
ஆம்... நானும் நீரோட்டம் காணத் தெரிந்தவனே, கண்களில்!
Tears Tamil Quotes
என் காதல் வலியை எழுதி காதல் வரியாய் மாற்றி மன காயத்திற்கு மருந்து தேட காகிதம் எடுத்தேன் ஆனால், என் எழுதுகோலுக்கு முந்திய என் கண்ணீர் துளிகள் காகிதத்தை கரைத்தது!
வாழ்க்கையில் சில உறவுகள் எதார்த்தமாய் தோன்றி தேடலை தெளித்து அன்பை அளித்து காதலை கொடுத்து இறுதியில் கண்ணீர் கடலில் மூழ்கடித்து விட்டு சென்று விடுகின்றன.
எந்த உறவுகள் நம்மை அன்பால் அரவணைக்கிறதோ, அந்த உறவுகள் தான் நம்மை அழவும் வைக்கிறது..
ஒருவரின் கண்ணீர் துளியில் இருவரின் காதல் வலி!
உன்னால் விழியில் நீரோடை, வலிகளில் ஊற்றாகி பாலைவனத்தில் மழை போல் பெய்கிறது, அர்த்தமற்ற அழுகை!
வலியை மனம் மறைத்தாலும் விழிகளால் முடிவதில்லை...
அவள் பிரிவால் என் வாழ்க்கையில் கண்ணீர் மழை!
பெரும்பாலும் நம் கண்ணீருக்கு காரணம், காரணம் இன்றி பிரியும் சில உறவுகள் தான்!
என்னால் மட்டுமே உன்னை அதிகமாக நேசிக்க முடியும் என்று கர்வமாக காதலித்தேன்! உன்னால் மட்டுமே என்னை அதிகமாக அழ வைக்க முடியும் என நிரூபித்து விட்டாய்!
கனவு வாழ்க்கை அனைத்தும், கண்ணுக்குள் கடலாய் கசியுதே!
காயங்கள் யாவும் வலிகளாக மாறி, கண்களில் வழியும் கண்ணீராக உருவாகி இதயத்தை ரணமாக்குகிறது!
அன்று உயிரை ஊற்றி நான் தீட்டிய என் காதல் ஓவியம், இன்று என் கண்ணீராலே அழிப்பதற்கா?
என்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்து சென்று விட்டாள்! கவிதைகளையும், கண்ணீர்த் துளிகளையும் தவிர!
பல தருணத்தில் வார்த்தைகள் ஊமையாகி தவித்துக் கொண்டிருக்கும் போது, கண்ணீர்த் துளிகள் பதில் கொடுத்துவிடுகிறது...
நினைவுகளால் நிறைந்த பேனா, நிற்காமல் அழுகிறது கண்ணீர் துடைக்க காகிதம் போதவில்லையே...
Post a Comment