50+ Sad Quotes in Tamil | சோகக் கவிதைகள்

Sad Kavithaigal in Tamil | சோகம் கவிதைகள்

நிம்மதியை அடமானம் வைத்துவிட்டு, மகிழ்ச்சியில் திளைத்து என்ன செய்ய?
நொறுங்கிப் போனதை சரி செய்ய இறுக்கி வைத்துள்ளேனே தவிர, இறுகிப்போகவில்லை...
முடிவிலியான அன்பு, மிக மோசமான முடிவைத் தருகிறது!

Sad Quotes Tamil

காதல் தந்த வலிக்கு எளிய மருந்து, காலம் தான்...
மன நோய் என்பது மனதால் வருவதில்லை, பல நேரங்களில், அருகில் இருக்கும் மனிதர்களால் தான் வருகிறது.
உன்னால் தனிமை அடைந்தும் உன்னையே தேடுகிறது மனம்!
நிஜமாக மாறிய கனவுகளை விட, கனவாக மாறிய நிஜங்களே இங்கு அதிகம்...
அவள் என்னவள் இல்லை என்று தெரிந்த பிறகும், அவளை நினைத்தே துடிக்கிறது என் இதயம்!
உனக்கான எதிர்பார்ப்பில் இத்தனை காதலென்றால், விலகியே இருப்பேன் நம் காதலுக்காக!
விரல் தீண்டும் இடைவெளியில் நீ இருந்தாலும், மனத்திற்கு நீண்ட தூரத்தில் அந்நியமாய் நீ...
காதல் தோல்வி அடைந்தவனின் கண்ணீர்க் கதை, அந்த கடலை விட பெரிது!
பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் எதையோ யோசித்துக் கொண்டே தலைசாயும் ஒவ்வொரு இதயத்திலும் இருக்கிறது, சொல்லப்படாத ஒரு வலி!
காயம் கொண்ட இதயம், துடிதுடித்து சாகிறது அன்பு என்னும் ஆயுதத்தால்!
அன்பைக் கொடுப்பது போல் கொடுத்து உன் அன்பால் என்னை உந்தன் காதலில் வாழச் செய்து, இன்று உன் அன்பால் என்னை விட்டு விலகி சென்று வேடிக்கை பார்ப்பது ஏனோ?
என்னை வெறுப்பவர்களையும் காயப்படுத்துபவர்களையும் மௌனமாக கடக்கின்றேன்!என் மனதின் வலியை அவர்களுக்குத் தரவேண்டாம் என்று!

Post a Comment

Previous Post Next Post

PostAds-1

PostAds-2

–>