கொலுசு கவிதைகள் | Kolusu quotes in Tamil
Anklet Quotes in Tamil
பெண்ணின் கால் கொலுசு
கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகுமா, அவள் கால் கொலுசின் முத்து மொழிகளுக்கு...
சலங்கை கட்டிய உந்தன் கால் மணி ஓசைக்குத் தாளமிட்டதே எந்தன் மனம்!
எண்ணிலடங்கா முறையில் சினுங்குகிறது அவள் கால்களில் சிக்கி தவிக்கும் அந்த கொலுசுகள்...
உன் பாதக்கொலுசு மணி ஓசையில் கொட்டிக்கிடக்கிறது, என் ஓராயிரம் கவிதைகள்!
இப்புவி கேட்கும் இன்னிசை... அவள் பாதத்தின் வருடலுடன் கொலுசொலி...
அவள் காலில் படர்ந்த கொலுசு; அவள் தேகம் தொட்டதால், அழகாகிப் போனதையே கண்டுகொள்ளாமல் குதித்தோடுகிறாள்!
என்னவளின் கொலுசு கவிதை
என் வாழ்நாளில் என்னை தோற்கடித்த ஒரே கவிதை, உன் கால் கொலுசின் சத்தம் மட்டுமே!
அவளின் கால் கொலுசின் சினுங்கல்களில் சிக்கிக்கொண்டது அவனின் இதயம்...
உன் கொலுசு சிணுங்கலில் கவிதைகள் உதிருதடி, என் பேனா முனையில்!
கால் கொலுசு கவிதைகள்
அவள் கால் கொலுசின் ஓசையிலே மயங்கி நிற்கிறேன், இவள் போடும் இன்னிசையை ரசித்து!
வானவில்லை வளைத்து, விண்மீனை முத்தாக கோர்த்து, கொலுசாக பரிசலிப்பேன் என்னவளின் கால்களுக்கு!
Post a Comment