Love Quotes for Wife in Tamil | மனைவி கவிதைகள்
Best Wife Quotes Tamil - சிறந்த மனைவி கவிதைகள்
மகுடம் தேவையில்லை - என் மனதை ஆட்சி செய்யும் மகாராணிக்கு!
அத்துனை கஷ்டங்களையும் மறந்து போகிறேன்... அவள் மடியில் படுத்துறங்கும் அந்த சில நொடிகளில்...
மனைவி அமைவதெல்லாம் கவிதை
மகிழ்ச்சியோடு ஏற்பேன் மரணமே ஆயினும்... உன் மடியில் கிடைத்தால்!
அழகின் ஒளியும் நீ... என் வாழ்வின் வழியும் நீ... அன்பான ஊடலும் நீ... என் வாழ்வின் தேடலும் நீ...
சுமக்கும் சுமை கூட சுகம் தான், சுமை நீயானால்...
நல்ல மனைவி கவிதை
தன் மனதிலே பல வலிகளை வைத்துக்கொண்டு, தன் துணைவனின் வலிகளை எல்லாம் ஆற்றிட வேண்டும் என நினைப்பது தான், பெண்களின் குணம்!
நான் மறந்தாலும் என்னை நேசிக்க நீ இருக்கிறாய் என்ற சந்தோசம் போதும்!
நெஞ்சோடு நீ சாய்கையில், நிஜங்கள் யாவும் மறக்கிறேன்!
ஆசை மனைவி கவிதைகள்
என் இதயத்தை இரவல் கேட்டாய், காதல் செய்ய... பட்டா எழுதினேன், காதல் போதும் என்று...
என் வாழ்க்கை கூட காகிதம் தான்! அதில் யாரோ எழுதிய அழகிய கவிதை தான் நீ!
என் அழகிய இதயமே, எத்தனை கோபங்கள் யார் மீது வந்தாலும், உன் பார்வை என்மீது பட்டால் போதும் கோபமும் கருணை கொள்ளும்!
Love Quotes to Wife in Tamil
எவ்வளவு மழை அடித்தாலும் என் இதயம் இதமான கதகதப்பில் சுகமாகத் துடிக்கிறதே! அவள் மார்பின் அரவணைப்பில் ஒளிந்து கிடக்கும் போது!
கட்டளைகள் ஏதும் இன்றி கட்டுப்படுகிறேன், உன் காதலுக்கு முன்!
கடற்கரை நிலவொளியில் நங்கையவளின் கரம் பற்றி நடை பயிலப் போகிறேன்! மணலை வருடும் அலை போல, அவள் புடவை என்னை வருடட்டும்!
Best Love Quotes for Wife in Tamil
உன் கோபம் தெறிக்கும் விழிகளில், சோகம் தரிக்க விடமாட்டேனடி!
கேட்டு ரசித்திட உனது குரல் ஒன்று போதுமடி! அதைத்தாண்டி, வேறொன்றும் தேவையில்லையடி!
உன்னோடு வாழ ஒரு ஜென்மம் போதாது பெண்ணே!
Best Wife Tamil Quotes
அடையாளமில்லா அகதி ஆனேன், அவள் மனதின் அன்புக்காக!
அழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகி அவள். என் இதயக் கோட்டைக்கு ராணி அவள், கேரளத்தில் பூத்த புன்னகைப் பூ அவள், என் உயிரினும் மேலான, என்னவள் அவள்!
உன் அருகினில் நான் வருகையில், அந்த நிலவின் அருகில் இருப்பதைப் போல குளிர்ச்சியூட்டுகிறதடி!
Love Poem for Wife in Tamil
இப்போதெல்லாம் நிலவு அழகாகத் தெரிவதில்லை! என் அருகில், நீ இருப்பதால்!
கோடி பெண்களை கடந்து சென்றாலும், என் மனம் தேடுவது ஏனோ உன்னை மட்டும் தான்...
உன் கைவிரல் பிடித்து நடக்கும்பொழுது மீண்டும் உணருகிறேன் என்னை மழலையாய்!
Manaivi Kavithai in Tamil
வானத்தில் சூழ்ந்து இருக்கும் மேகங்கள் கலையலாம்! ஆனால், என் நெஞ்சில் சூழ்ந்திருக்கும் உன் மோகங்கள் கலையாது!
வாடினேன் என் அவளுக்காகவே..... இன்பமாய் துன்புற்றேன், என் அவளுக்காகவே!
ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்; ஆனால் நான் உன்னை நேசிப்பது போல் வேறு எந்த இதயமும் நேசிக்காது...
நல்ல மனைவி கவிதை
இரவும் பகலும் என் தேடல் யாவும் உனதாக, உனக்காகவே இருந்திடும்!
என் முத்தங்களால் அலங்கரிக்கப்படவே இவ்வளவு அழகாய் படைக்கப்பட்டதோ உன் நெற்றி?
தீராத மோகம் தான்; உன் மீது நான் கொண்ட காதல்...
காதல் மனைவி கவிதை
என்னைத் தாண்டி உன் நிழலைத் தொடவும் அனுமதிக்க மாட்டேன்; யாரையும்!
Post a Comment