100+ Love Quotes for Husband in Tamil | கணவனுக்கு கவிதைகள்
Husband Love Quotes in Tamil - கணவன் கவிதை
வாழ்வில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும், என்னை எனக்கே யார் என்று உணர்த்தியது நீயடா!
உன் கண்கள் பேசும் கவிதைகள் யாவும் எனக்கானவை; எனக்காக் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதில் சுயநலக்காரி நான்!
என் நெற்றியில் நீ வைத்த குங்குமம், நம் காதலின் அடையாளம்!
ஒவ்வொரு பெண்ணும் ஆணிடம் காதலை வேன்டுகிறாள்.... அவள் தாயாகும் வரை அல்ல! அவள் ஆயுள் முடியும் வரை!
அவன் விரும்பியதை என் விருப்பமாக மாற்றிக்கொண்டேன்... காதலுக்காக! என் கள்வனுக்காக!
ஒரு நாள் கூட யுகமே, அவன் அருகில் இருந்தால்! ஒரு நாள் கூட வரமே, அவன் கரம் கோர்த்து நடந்தால்! ஒரு நாள் கூட சுகமே, அவன் தோளில் சாய்ந்தால்! அவ்வொற்றை நாளும் வெற்றுநாளே, அவனற்று இருந்தால்...
நீ என்னருகில் இருக்கும் போதெல்லாம், விண்ணில் ஊஞ்சல் கட்டி ஆடுவது போல் தோன்றுகிறதடா!
என்னருகில் நீ இருந்து அக்கறையோடு பார்த்துக் கொள்ளும் போது, என் மனசு லேசாகிவிடுகிறது!
மாமா! நீ என்னோடு இல்லாமல், சுவாசமே இல்லை எனக்கு!
என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும், என் இதயம் மட்டும் என்னவன், உன் பெயரையே சொல்லிக்கொண்டே துடிக்கும் காதலுடன்!
எதுவுமே வேண்டாம் என்பதே, நீ மட்டும் வேண்டும் என்பதற்காகத்தான்!
என்னை அறியாமல் சிரிக்க வைக்கும் என்னவனின் சிரிப்பு, என் உச்சகட்ட கோபத்தையும் அடக்கிவிடுகிறது!
என்ன செய்தாலும் ரசிக்கிறான்! ஏன் என்று கேட்டால் நான் ரசிக்க கிடைத்த பொக்கிஷம் என்னவள் என்கிறான்!
தவறே செய்தாலும் தண்டிக்க மனம் வரவில்லை, என் அன்பிற்கு முன் ஒரு குழந்தையாக மாறிவிடும் உன்னை!
உன்னைப்போல் யாரும் இல்லை என்று உன்னை வேறு யாருடனோ ஒப்பிடுவதற்கு விருப்பம் இல்லை எனக்கு!
தாயாக மாறி விடுகிறேன், சோகத்தில் தேங்கும் அவன் கண்ணீரைத் துடைக்க!
இதுவரை என் உலகம் இவ்வளவு அழகாய் இருந்தது இல்லை! புது உலகம் ஒன்று கண்டேன் அவன் கண்களில்!
அவன் அரவணைப்பில் ஏனோ, சிறு பிள்ளையாகி விடுகிறேன் நான்!
நேசிப்பது நீயாக இருப்பதனால் மட்டுமே காதலை அதிகமாக| பிடித்திருக்கிறது..!
நீ என் அருகில் இருப்பதை விட, ஆனந்தமும் பாதுகாப்பும் வேறு இல்லை எனக்கு உலகில்!
உன் உலகம் பெரியதாக இருக்கலாம்! ஆனால், எனக்கான உலகம் நீ மட்டுமே!என் பாதி வாழ்வில் வந்து என் பாதியாக ஆனாய் நீ!
-
அதிகமான கோபமும் எலையற்ற பாசமும் உன்மேல் தான் வருகிறது; ஏனென்றால் நீ என்னவன்!
-
Hubby Love Quotes in Tamil
-
ஒப்பனை எதுவும் தேவை இல்லை; அவன் ஒற்றை விரல் குங்குமம் போதும், ஒட்டு மொத்த அழகும் என்னை வந்து சேரும்...
-
அவனின், பக்குவத்திற்குள்ளும்... பதுங்கிக் கொண்டிருக்கும் குழந்தை தனம், அவளுக்கு மட்டுமே உரித்தான ஒன்று!
-
Husband Kavithai in Tamil
-
மனைவியை தாயைப் போல் அன்பு செலுத்தி, தங்கையைப் போல் பாதுகாத்து, தந்தையைப் போல் அரவணைத்து, நண்பனைப் போல் பழகி, காதலியைப் போல் நேசியுங்கள்! அவள் உங்கள் அன்பிற்கு என்றும் அடிமையாய் இருப்பாள்!
-
உன் கைவிரல் பிடித்து நடக்கும்பொழுது மீண்டும் உணருகிறேன் என்னை மழலையாய்!
-
Wife Love Quotes for Husband in Tamil
-
வானத்தில் சூழ்ந்து இருக்கும் மேகங்கள் கலையலாம்! ஆனால், என் நெஞ்சில் சூழ்ந்திருக்கும் உன் மோகங்கள் கலையாது!
-
மகிழ்ச்சியோடு ஏற்பேன் மரணமே ஆயினும்... உன் மடியில் கிடைத்தால்!
-
எதிர்பாராமல் கிடைத்த இவனின் அன்பிற்கு, இவள் எப்பொழுதும் அடிமைதான்!
-
Romantic Love Quotes for Husband in Tamil
-
தென்றல் உரசிய தருணம் உன் விரல் தீண்டலோ என்றெண்ணி என் மேனி சிவந்ததடா! என் நினைவோ திரும்பவே நொடிகள் கோடி வேண்டுமடா!
-
அமைதியான வாழ்க்கையை, அழகாக மாற்றி ஆனந்தத்தை முழுவதுமாகத் தந்தவன் இவன்!
-
என் அதிசயன்! ஆதியும் நீ, அந்தமும் நீ என்னவனே!
-
Love Quotes to Husband Tamil
-
இவள் சிந்தனையில் எப்போதும், அவன் மட்டுமே!
-
அவனின் குழந்தை தனமான செயல்கள் கூட, சில நேரம் ரசிக்கும் படி தான் உள்ளது!
-
ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்; ஆனால் நான் உன்னை நேசிப்பது போல் வேறு எந்த இதயமும் நேசிக்காது...
-
Sweet Love Quotes for Husband in Tamil
-
அவனுக்காகவே வித விதமாய் உடை அணிந்து தினமும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்!
-
Post a Comment