Mounam Quotes in Tamil | மௌனம் கவிதை வரிகள்
Mounam Kavithai in Tamil - மௌனம் கவிதைகள்
காதலைச் சொல்ல மொழிகள் தேவையில்லை... மௌனங்களே போதும்!
மௌனம் Quotes
உங்களுக்கு மதிப்பில்லை என்று நீங்கள் உணரும் இடத்தில் மௌனமாக இருங்கள்! காலப்போக்கில் அந்த மௌனம் உங்களுக்கான மதிப்பை ஈட்டித்தரும்!
அமைதியை தேடுபவன், மௌனம் கொள்வான்!
காதலியின் மௌனம் Quotes
என் காதல் சொல்ல வந்தேன்! மௌனத்தில் நீ மரணத்தில் நான்!
சத்தமின்றி இதயத்தை துளைக்கும் உன் மௌனத்தை விடவா, கூரிய ஆயுதம் இவ்வுலகில் இருக்கப் போகிறது?
யாரோடும் பேசாத மவுனங்களின் அர்த்தம் அவை யாரோ ஒருவரின் பேச்சுக்காக காத்திருக்கின்றன என்பதாகும்!
மௌனம் சாதிக்கிறாள்; எத்தகைய படைகொண்டு போரிட்டாலும், பெண்ணவள் மௌனத்தை வெல்ல முடியாது.
Silent Quotes in Tamil
எல்லா நேரங்களிலும் மௌனம் சம்மதம் என்று அர்த்தமில்லை, சில நேரங்களில் அவர்களுக்கு பேச இடம் கொடுக்கப் படவில்லை என்பதே நிதர்சனம்!
மனதில் மணல் சிற்பம் செய்து வைத்தேன்! உன் மெளன ஆழிப்பேரலை, அதை அழித்தது!
என் மௌனத்தின் வலியை யார் உணர்கிறார்களோ அவர்களே என்னை உணர்ந்து கொண்டவர்களாக இருப்பர்கள்.
பெண்னே, மரணம் என்பது அவ்வளவு கொடுரமானது அல்ல; உன் . மௌனங்களோடு ஒப்பிடுகையில்.
மனிதர்கள் சிலரின் மௌனங்களை மொழிபெயர்த்தால், மில்லியன் கணக்கில் மஹாபாரதங்கள் எழுதிவிடலாம்!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்... ஆனால், மௌனத்தின் அர்த்தம் நம்மை நேசிப்பவர்க்கு மட்டுமே புரியும்!
மனம் உடைந்து போனேன்... உன் வார்த்தைகளால் அல்ல உன் மௌனங்களினால்!
ஆயுதம் ஏதும் இல்லாமல், விரல் கூடப் படாமல், கொலை செய்ய முடியும்; உன் மௌனத்தால் மட்டுமே!
காரணமே இல்லாமல் பேசாதே என சொல்வதும், காரணம் கேட்டால் மௌனத்தால் கொல்வதும் பெண்களின் ஆயுதம்!
மரணத்தை தொட்டுவிட்டு வந்தவன் நான்! உன் ஒரு சில வினாடி மௌனதால்!
நீ உன் பேச்சை நிறுத்திக் கொண்டால், மறு நொடியே நான் என் மூச்சை நிறுத்திக் கொள்வேன்!
இனி யார் மீதும் அதிக பாசம் வைத்து விடாதே என்று செருப்பால் அடித்துச் சொன்னது, அவளின் மௌனம்!
மௌனம் என்பது, வார்த்தைகளுக்கு கிரீடம் வைத்தாற்போல் இருக்க வேண்டும்.
Post a Comment