Rain Quotes in Tamil | மழை கவிதைகள்
அவள் பிஞ்சு கையைத் தொட்டுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில், மழைத்துளிகள்!
மழையாக உன்னைத் தீண்ட, வானத்தின் மேகங்கள் உன்னை பூமிக்கு அனுப்பி வைத்ததடி பெண்ணே!
நீயும் நானும் நனைந்த முதல் மழையின் ஈரம் காயவில்லை, இன்று வரையிலும் என் மனதினுள்!
மழை மீது நான் கொண்ட காதலால், பொறாமை கொண்ட இடியும் கொஞ்சம் சத்தம் போடுதே..!
அன்றைய நாள், அந்தியில் அவள் நனையுமட்டும் அவ்வளவு ஒன்றும் அழகாய்த் தெரியவில்லை அந்த மழை!
உயிரே! உன் இதயத்தை எனக்குக் கொடுத்ததைப் பார்த்த மேகம், அடிக்கடி காதல் தோல்வியால் அழுகிறது!
Post a Comment