Amma Quotes in Tamil | அம்மா கவிதைகள்
Amma Kavithai | அம்மா பற்றிய கவிதைகள்
ஒவ்வொரு நாளும் கவலைபடுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை படமாட்டாள் - அம்மா!
எல்லா உறவையும் விடவும் மிகவும் சிறப்பானதாக அமைந்தது தான் அம்மா! ஒரு நாளில் போற்றிக் கொண்டாடக் கூடிய உறவல்ல! வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய உறவு தான் அம்மா!
எல்லா குற்றங்களையும் மன்னிக்கும் ஒரே நீதிமன்றம், அம்மாவின் இதயம் மட்டும் தான்!
-
உன் கண்ணீரை தடுப்பதற்கு, அவள் கஷ்டங்களை சுமந்துக்கொள்வாள், அம்மா!
அம்புலி காட்டி, இன்னமுதூட்டி என்பசி தீர்த்தாயே! அல்லும், பகலும் ஈயெறும் போட்டி இன்னுயிர் காத்தாயே!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும், அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய, யாரும் இல்லை, இவ்வுலகில்...
மாறிக்கொண்டே இருக்கும் உலகில், மாசற்ற நம் தாய் அன்பு மட்டுமே மாறாமல் மலர்ந்து மணம் வீசி கொண்டிருக்கிறது, என்றுமே மக்காமல்...
எத்தனை உறவுகள் உன்னை மதிக்காமல் சென்றாலும், உன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உன் கண்ணீரை துடைப்பவள், அம்மா தான்!
தெய்வத்தை கைபிடித்து கோவிலுக்கு அழைத்து சென்றது உண்டு, அம்மா...
இருளான இடமும், நமக்கு அருளாகும் - தாயின் கருவறை
நம்மிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும், நம் அம்மாதான் நமக்கு பெரிய சொத்து!
இருட்டிலும் பயமறியாமல் இருக்கிறது குழந்தை, தாயின் கருவறைக்குள்!
நான் பார்த்த முகம், நான் பேசிய முதல் வார்த்தை, நான் மறக்க முடியாத முதல் முகம், என் அம்மா!
-
கல்லறையில் உறங்க சொன்னால் கூட உறங்குவேன்! அம்மா நீ வந்து தாலாட்டு பாடினால்!
தமிழில் அம்மா என் சொல் எப்படி வந்தது என்று தெறியாது ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம் அம்மாவில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்!
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை! அம்மா சமயலறை...
நம் வாழ்வில் நமக்கு நல்லதை மட்டுமே நினைத்து .. நம் மீது அன்பு செலுத்தி நமக்காக வாழும் அம்மாக்களுக்கு அன்னையர் தினம வாழ்த்துகள்!
அம்மா.. உன் வாழ்க்கையின் கேள்வி நான்! என் வாழ்க்கையின் விடை நீ! உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி நான்! என் வாழ்க்கையின் அருமை நீ! உன் வாழ்க்கையின் வெளிச்சம் நான்! என் வாழ்க்கையின் பொக்கிஷம் நீ! அம்மா உன் முகத்துல புன்னகைய பார்கிறத விட வேறெதுவும் பெருசுயில்லை லவ் யூ மா 😍
என் அம்மாவின் கருவறையே நான் மீண்டும் மரணித்து ஜனிக்க விரும்பும் கருவறை...
சோர்ந்து போய் வந்தாலும் சரி, நான் தோற்றுப் போய் வந்தாலும், சரி என்றுமே எனக்கு ஆதரவுகரமாக என் “அம்மா” என் அருகிலே...
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை அம்மாவின் கொஞ்சலில் மட்டும் இன்னும் குழந்தையாக! அம்மா 😘❤️
கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா!
அம்மாவிடம் இருந்து கற்காத பிள்ளை உலகில் எதை கற்றும் வெற்றி பெற போவதில்லை!
-
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே 💕
கருவினில் தாங்கி உருவினில் உயிர் பெற உழைத்தவள் அம்மா! உயிர் எழுத்தின் உண்மைப் பொருள் அம்மா!
வார்த்தைகளே இல்லாத வடிவம்! அளவுகோளே இல்லாத அன்பு! சுயநலமே இல்லாத இதயம்! வெறுப்பையே காட்டாத முகம்! அம்மா!
அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள்! அம்மா!
மனைவியின் முந்தானையில் துடைத்த நாட்களை விட அம்மாவின் முந்தானையில் மூக்கு துடைத்த நாட்களே இனிமையானது...
காக்கும் கரங்களும்... கருணை உள்ளமும்... கண்களில் பரிவும்... எண்ணங்களில் புனிதமும்... அழகிய வதனமும்... ஆர்வமுள்ள சேவையும், கொண்டு உருவமும்... அமைந்திட்ட, புவியில் பிறந்த புனிதையே அன்னை!
பிள்ளை நனையாமல் பிடிக்கிறாள் தாய் குடை, இருந்தும் பிள்ளை நனைகின்றது தாயவள் பாசமழை!
தன் கழுத்தில் பொன்-நகை இல்லாத போதும், புன்னகையோடு வாழும் ஒரேயொரு பெண், அம்மா மட்டுமே!
எத்துணை வயதானாலும் வலிக்கும் போதெல்லாம் உன்னை அழைக்கிறது, என் உதடுகள் என்னை அறியாமலேயே "அம்மா"
ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது!
விண்ணிலிருந்து தவறி விழுந்த தேவதைக்கு இந்த மண்ணில் உள்ளவர்கள் வைத்த பெயர் "அம்மா"
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்றால், அகில உலக அழகியாக அன்னைதான் இருந்திருப்பாள்!
அம்மா, சுவர்க்கத்தை யாரும் பார்த்தது கூட இல்லை. ஆனால் நானோ முத்தமே இட்டிருக்கிறேன்; உனக்கே தெரியாமல், உன் பாதங்களை!
Amma Quotes in Tamil Words
உதிரத்தை உணவாய் தந்து நோயின்றி எனை காத்தாய், தாயே உன்னைக் காக்க நான் மறவேனோ கடைசி காலங்களில்!
கவிதையை சிந்தையில் தேடிக் கொண்டிருந்தேன்... அது அவள் முகம் என அறியும் வரை! அம்மா...
Post a Comment