Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Awaiyar Ponmoligal in Tamil

அன்னை, தந்தையே கண்கண்ட தெய்வமாவர். அவர்கள் மீது அன்புகாட்டு.
-
கோயிலுக்கு சென்று சுடவுளை வழிபடுவது சிறப்பானது.
-
பெற்றோர், மனைவி, குழத்தை என குடும்பத்துடன் வாழ்வதே நன்மை தரும். அக்கம்பக்கத்தினருடன் அன்புடன் பழகு. அதுவே நல்லது.
-
அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கியத்திற்கு ஆதாரமான எழுத்தும் நமக்கு கண் போன்றவை.
-
வேதம் ஒதுவதை விட ஒழுக்கமுடன் வாழ்வதே சிறப்பு.
-
சிக்கனமாக இருந்து பொருளைத்தேடு. அதுவே வளர்ச்சிக்கான வழி.
-
உனக்கு கிடைக்காததை எண்ணி வருத்தப்படாதே. அதை மறந்துவிடு.
-
பிறர் உனக்கு கெடுதல் செய்தால் அதை மறப்பதே உயந்த செயல்.
-
தேவையிருக்கும் இடம் சென்று உதவுவதே, ஆட்சி செய்வோரின் பணியாகும்.
-
வாரிசுகள் ஒற்றுமையாக வாழ்வதே ஒரு பரம்பரையின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் அழகானது.
-
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதே கல்வி கற்றதற்கு அழகு.
-

Close