Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

100+ Best Life Reality Quotes in Tamil

உனது கண்கள் சரியாக இருந்தால், இந்த உலகத்தை உனக்கு பிடிக்கும்! உனது நாக்கு சரியாக இருந்தால், இந்த உலகத்திற்கு உன்னை பிடிக்கும்!
ஒரு முட்டாள் தரும் உண்மையான அன்பை, எந்த புத்திசாலியாலும் தர முடியாது!
எல்லோருக்கும் பிடித்தமான நபராக இருக்க வேண்டுமெனில், நீங்கள் தோற்றுக்கொண்டே இருந்தால் மாத்திரமே சாத்தியம்!
வண்ணத்திலும் உருவத்திலும் உள்ள அழகை விட, எண்ணத்திலும் செயலிலும் உள்ள அழகு நிலையானது!
Maturity யாதெனில், "அழகு" என்பது தேடுவதை விடுத்து இருப்பதை ஏற்றுக் கொள்ளும் மனம் என்பதை உணர்வதே...
முட்டாள்கள் பேசியே தங்களை காட்டிக் கொடுக்கிறார்கள், அறிவாளிகள் மௌனமாக இருந்தே முட்டாள்களை கண்டுபிடிக்கிறார்கள்!
பிறருக்காக இரக்கப்படுவதில் தவறில்லை! ஆனால், நாம் ஆடாய் இருக்கையில் ஓநாய்க்காக வருந்துவது முட்டாள்தனமே!
அங்கீகரிக்க யாரும் இல்லாததால், அநாதையாக ஒரு ஓரத்தில் அடைந்து கிடக்கிறது, பலரது திறமைகள்!
ஆண்களின் வாழ்க்கை எனும் புத்தகத்தில், சிரிக்க மறந்த பக்கங்களே அதிகம்!
விரும்பியவை அனைத்தும் எப்பொழுதும் கிடைப்பதில்லை... கிடைப்பது அனைத்தும் ஒருபோதும் நிலைப்பதில்லை...
ஒவ்வொருவர் வாழ்க்கையும் அழகு தான்... வெவ்வேறு கோணத்தில் பார்க்கையில்!
இந்த உலகம் நாம சொல்ற உண்மையை விட, மத்தவங்க நம்மை பத்தி சொல்லும் பொய் தான் நம்பும்...
-
-
அப்பா வெளியில் படும் கஷ்டத்தையும், அம்மா வீட்டில் படும் கஷ்டத்தையும் நினைத்து பார் காதல் என்பது கனவில் கூட வராது...
-
வசதியை காட்டி பூசாரியை விலைக்கு வாங்கலாம்! ஆனால் ஆண்டவனை வாங்க முடியாது!
-
-
வாழ்க்கையில் பாடங்களை கற்றுத் தருவது... விலை மதிப்பில்லாத பசித்த வயிரும், பணம் இல்லாத வாழ்க்கையும் உடைந்த மனமும் தான்!
-
விட்டால் போதும் விழுந்து எழுந்து ஓடி விடுவேன். விடமாட்டேன் என்று விரட்டிக் கொண்டே வருகிறது விதி!
-
-
வாழ்வில் தேவையில்லாத மூன்று செயல்கள் 1. கடந்து போனதை நினைத்து, இடிந்து போவது. 2. அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து, துவண்டு போவது. 3. அனைவரையும் திருப்திபடுத்த நினைத்து, நம் நிம்மதியை இழப்பது.
-
பொய் சொல்லாமல் எவரும் இல்லை... பொய் சொல்லியே எவரும் இல்லை!
-
-
புத்திசாலியாய் இருங்கள்! முட்டாளாய் நடியுங்கள்! வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்!
-
கவலைக்கு நாம் இடம் கொடுத்தால், அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும்.
-
-
இல்லாதவர்க்கு இல்லை எனும் தொல்லை; உள்ளவர்க்கு வாழ்க்கையில் உள்ளதெல்லாம் தொல்லை!
-
எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னு நினைத்தால் முதல் கெட்டவன் நீதான்!
-
-
கடந்து போன நிமிடம், விட்டுச்சென்ற நினைவு, உடைந்துபோன நம்பிக்கை, பேசிவிட்ட வார்த்தை, இவற்றை என்றைக்கும் நம்பால் திரும்ப பெற முடிவதில்லை.
-
எல்லோரிடமும் இருக்கிறது என்பதற்காக எல்லாம், அவ்வளவு எளிதாக தூக்கி கொடுத்து விட முடியாது காதலை...
-
-
சுகமாக வாழும்போதே துக்கத்தையும் பழகிக்கொள். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்!
-
எங்கே உன் வார்த்தைகள் மதிக்கப்படுகிறதோ, அங்கே உன் உணர்வுகளும் மதிக்கப்படும்!
-
-
உங்களுடைய துன்பங்களுக்கு ஒரே காரணம், வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல நடக்காதது தான்!
-
மெய்யான உலகைவிட, பொய்யான கனவே அழகு!
-
-
ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் சிறு வித்தியாசம் தான். நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம். நம்மைத் தவிர ஏதுமில்லை என்று நினைப்பது ஆணவம்!
-
போலியான புகழ் என்பது, வேரில்லாத மரம் போன்றது. உண்மைக் காற்று ஓங்கும்போது குடை சாய்ந்து விடும்!
-
-
வலிகள் தந்தவரை வதைப்பது எப்படி என்ற வன்மத்துடன் அலையும் பலருக்குத் தெரிவதில்லை, புன்னகை என்னும் பேராயுதத்தின் வலிமை என்னவென்று!
-
ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒரு விடயத்தில் ஆசிரியராக அமைந்து விடுகின்றனர், வாழ்கையில் சந்திக்க நேரிடும் ஒவ்வொரு நபர்களும்!
-
-
இலையுதிர் காலத்தில், தான் என்றோ கூடிட்டு வாழ்ந்த மரக்கிளையில் வந்து இளைப்பாறி செல்லும் பறவையை போலவே, மனிதர்களும்! அவ்வப்பொழுது, வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்து இளைப்பாறிக்கொள்கிறார்கள்!
-
மனிதர்கள் சாவதே இல்லை, காலம் தான் சாகிறது வயது என்ற பெயரில்!
-
-
விடியும் வரை தெரிவதில்லை, கண்டது கனவு என்று! வாழ்க்கையும் அப்படி தான், முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று!
-
சீக்கிரமா கிடைக்கிற எதுவும், தாமதமா கிடைக்கிற எதுவுக்கும் ஈடாகாது!
-
-
நிஜத்தை விட நிழல் அழகாகத் தோன்றலாம். ஆனால், என்றும் நிஜமே நிலைத்திடும்!
-
-
காயம் கொண்ட மனதிற்கு பல மருந்துகள் தேவை இல்லை; ஒரு "அன்பு உள்ளம்" மட்டுமே போதும்!
-
நிறையில் குறை காணுவதைப் போல, குறையிலும் நிறை கண்டால் மகிழ்ச்சி மலரும்...
-
-
பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது!
-
ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடிச் செல்கிறாயோ, அப்போது துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னைத் தேடி வரும்!
-
வாழ்க்கையில் பிடித்த வாழ்க்கையை வாழ்பவன் "அதிர்ஷ்டசாலி" எந்த வாழ்க்கையாக இருந்தாலும் பிடித்து வாழ்பவன் "புத்திசாலி"
-
உன்னால் முடியாது என்று உரைப்போர் உன்னோடு உள்ளவரை, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொள்...
-
சுகமாக வாழும்போதே துக்கத்தையும் பழகிக்கொள்; ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்...
-
படித்தாலும் புரியாத புத்தகம் - பெண்
படிக்கத் தவறிய புத்தகம் - தந்தை
படிக்க விரும்புகிற புத்தகம் - அன்னை
படித்ததும் ரசிக்கும் புத்தகம் - மழலை
தொலைக்கக் கூடாத புத்தகம் - வாழ்க்கை!
-

மன அமைதிக்குச் சிறந்த வழி, வெறுப்பதை விட ஒதுங்கிப் போவதும், ஒதுங்கிப் போவதை விட, மறந்து போவதுமாகும்...
-

பிரபஞ்சம் யார் பிறப்பிற்காகவும் ஒரு நொடி சிலிர்த்துக் கொண்டதும் இல்லை, யார் இறப்பிற்காக ஒரு நொடி நின்று இயங்கியதும் இல்லை...
வேண்டாம் என்பதால் எதுவும் முடிந்து விடுவதும் இல்லை, வேண்டும் என்பதால் எதுவும் நிலைத்து விடுவதும் இல்லை...
பலரின் வாழ்க்கை திரையரங்கத்தில் பார்க்கும் திரைப்படம் போன்று பிரம்மாண்டமாக பலரால் கொண்டாடபட்டாலும், இறுதி காலத்தில் நூலகத்தில் தூசி படிந்த நிலையில் இருக்கும், புத்தகம் போன்று காலம் அவர்களை ஓரங்கட்டிவிடுகிறது...
மாற்றத்தை எதிர்பார்க்கும் சமூகம், தனி மனித மாற்றத்தை மட்டும் ஏற்க மறுக்கிறது!
மனிதம் மாறவில்லை! மாறியதென்னவோ மனிதர்களின் மனம் தான்!

Close