Love Figh Quotes in Tamil | காதல் சண்டைகள் கவிதைகள்
அன்பு சண்டை கவிதைகள் | Husband and Wife Love Fight Quotes in Tamil
காலைநேரக் கோபங்கள் யாவும், மாலைநேரக் கொஞ்சலில் கரைகிறதே...
சண்டைகள் ஆயிரம் வந்தாலும், சலிக்காத காதலை உன் வாழ்நாள் முழுவதும் தந்திடுவேன்!
என்னதான் சண்டையிட்டாலும், "நீ எனக்கானவள்"- என்பதில் எப்போதும் எனக்கோர் கர்வம் உண்டு!
சின்னச் சின்ன சண்டையில் இருந்து மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம், எங்கள் காதலை!
அன்பே உன் வெட்கத்தை ரசிப்பதற்காகவே, உன்னை சீண்டிப் பார்க்கத் தோன்றுகிறது!
சண்டை போடப் பிடிக்கும், நீ செய்யும் சமாதானத்திற்காக!
என்னிடம் சண்டையிட அவளுக்கு ஆசை. அவள் என்ன செய்தாலும், மனம் அவள் வழியில் செல்ல வேண்டும் என்பதே எந்தன் ஆசை!
எத்தனை சண்டைகள் வந்தாலும் கடைசி வரை பிரிந்து விடாமல் இருப்பது தான், உண்மையான காதல்!
Tamil Love Fight Quotes
உன் குறைந்த பட்ச காதலையும், அதிகபட்ச கோபத்தையும் நீ என் மீது காட்டும் போது உணர்கிறேன், உன் உண்மையான காதலின் ஆழத்தை!
உன்னால் செய்தேன் என்பதை விட, உனக்காக செய்தேன் என்பது தான் உச்சக்கட்ட மகிழ்ச்சி!
Lovers Fight Quotes in Tamil
அது என்னவோ தெரியவில்லை; என்னை வெறுப்பேற்றி விளையாடுவதில் அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்!
குரல் உயர்த்தி கோபம் காட்டி, உன் காதலை கொட்டி விடுகிறாய். உன்னையும் அறியாமலேயே!
அவள் கோபத்தில் என்னைத் திட்டும் வார்த்தைகள் யாவும் முற்றுப்புள்ளி வைக்க இயலா காதல் காவியம்!
அடிக்கடி சண்டை போடும் உறவில் அன்பு மிகவும் ஆழமானதாக இருக்கும்!
அவளை கெஞ்சிக் கொண்டே, கொஞ்சுவது கூட ஒரு சுகம் தான்!
நீயோ ரஷ்யாவை போன்று என்மீது போர் தொடுக்கிறாய், நானோ உக்ரைன் போன்று உன் கண்களால் சேதமடைகிறேன்!
பிடித்தவர்களிடமும், பிரியமானவர்களிடமும் தானே, சண்டை போட முடியும்! பிடிக்காதவர்களிடம் சண்டை, சண்டை இட்டு பேச வேண்டாம் என்பதற்காக! பிடித்தவர்களிடம் சண்டை, சண்டையிட்டாவது பேசலாம் என்பதற்காக!
நீ சிரிக்காமல் இரு, மொரைக்காமல் இரு, பேசாமல் கூட இரு, ஆனால் என்னிடம் சண்டையிடாமல் மட்டும் இருந்துவிடாதே! ஏனெனில், உன்னை கொஞ்சவும், கெஞ்சவும் எனக்குள்ள சந்தர்ப்பம் அது ஒன்றே!
சிறு புன்னகையை காண்பதற்காக, பிடித்த நபர்களிடம் வேண்டுமென்றே தோல்வி அடைவதும், ஒரு வெற்றி தான்!
சண்டைகள் வந்தாலும் காதலை விட்டு விடாதீர்கள். காதல் ஒன்றும் பூக்கள் அல்ல; காற்றடித்தால் உதிர்வதற்கு!
எதிரும் புதிரும் எல்லையற்ற சண்டையில் மிஞ்சுவது அன்பு மட்டும் தான்...
அர்த்தமில்லா உன் கோபமும் அழகாய் இருக்கிறது, உன் கோபம் அர்த்தமுள்ளது தான் என்று நீ பிடிவாதம் பிடிக்கையில்!
ஆழமான நேசம், அளவோடு கோபம், காரணம் இன்றி காதல்; இதையெல்லாம் கொஞ்சமாய்க் கற்றுக் கொண்டேன், உன் வருகையால்!
அவளின் அதிகபட்ச கோபமும், சண்டைகளும் அவனை விட்டு விலகிச்செல்ல அல்ல என்பதை புரிந்து கொண்டவனே, அவளுக்கானவன்!
நீ காட்டிய கோபத்தால், உலகையே வெறுக்கிறேன் ஏனோ!
கண்ணாடியும் பிம்பமும் பேசிக்கொள்வது போல, ஒட்டியும் ஒட்டாமல் ஒரு சண்டை, பிறகு முதலில் யார் பேசுவது என்ற பிடிவாதத்தில் இருவருமே தோற்றுப் போகிறோம்! இன்னொரு நாள் பார்த்து கொள்வோம் என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது நமது இரு கரங்களும்!
பிடிவாதம் தலைத் தூக்கும் போதெல்லாம், தூரம் விளக்கிச் சொல்கிறது நம் இருவருக்குமான காதலை!
Post a Comment