Love Quotes for Her in Tamil | காதலி கவிதைகள் | Tamil Quotes for Lover
Love Quotes for Lover in Tamil | என்னவளுக்கு காதல் கவிதைகள்
உன் ஓர் நொடி புன்னகை ஒன்றே போதும்... இதயம் இடைவெளி இன்றித் துடிக்கும்...
உன் அழகுக்காக உன்னைப் பிடிக்கவில்லை, உன்னைப் பிடித்ததால்தான் உன் அழகைப் பிடிக்கிறது!
கொலைகாரியும் அவளே... கொள்ளைக்காரியும் அவளே...
கள்வனாய் இருந்த என்னை, கவிஞன் ஆக்கிவிட்டாயடி! நான் எழுதப் போகும் முதல் கவிதை, உன் பெயர்!
என் எண்ணங்கள் மொத்தம் நீயாகிப் போக, என் எழுத்துக்கள் அனைத்தும் உனதாகிப் போகின்றது!
உன்னில் தொலைந்தது ஒரு பாதி, உன்னால் தொலைந்த மறுபாதி, நான்!
வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும், தாங்கிக் கொள்வேன் என் அருகில் நீ இருந்தால்!
உன் அழகெனும் சிறையில் கவிஞனாய் அகப்பட்டேன்! எழுதினேன், உன் இதயச்சுவர்களில் என் காதலை கவிதையாக...
என்னையும் ரசிக்க வைத்த முதல் கண்கள்; என்னையும் நேசிக்க வைத்த முதல் இதயம்; என்னையும் கவிதை எழுத வைத்த முதல் பெண் நீ தான்!
அவளை நினைத்து கிறுக்குவது எல்லாம், கவிதையாக மாறுகிறது!
உன்னைக் கண்ட நாள் முதல், நடமாடும் பினமானேன் என் இதயத்தை நீ களவாடிச் சென்றதால்!
உன் கூந்தல் ஏறும் மல்லிகையும் என்னை கண்டவுடன் வெட்கத்தில் மலருதடி!
கண்ணீர் கடல் போல் பெருகினாலும், காதல் மழை போல் பொழிகிறது உன் மேல்...
என்னை மறந்து அவளைப் பார்க்கும் நேரம் தான், நான் மிகவும் ரசனை உள்ளவனாகத் தோன்றுகிறேன்...
பெண்ணே... உன்னைக் கொண்டாட ஒரு நாள் போதுமா?
Love Quotes for Lover in Tamil
கிளி கொத்தியப் பழத்திற்குச் சுவை அதிகம் என்பதை உணர்ந்தேன்! என்னவள் சுவைத்த பழத்தை நான் சுவைத்த வேளையிலே!
வேண்டும் என்று அடம்பிடிக்கின்ற அளவிற்கு என் வாழ்க்கையில் எதையும் நான் நேசிக்கவில்லை, உன்னைத் தவிர எதையும்!
பேசப் பேச சலிக்காத போதையாக இருக்கிறது அவன் பேசும் மொழி!
சிறகில்லா தேவதையைக் கண்டு சிறகடித்துப் பறக்கிறது இதயம்!
நானெழுதிய உவமைக் கவிதைகளில் மிகச் சிறந்த உவமை "நீ" மட்டும் தான்!
Kaadhali Quotes Tamil
மெந்நிற மேனியில், செந்நிற சேலை சூடிய வெண்ணிற தேவதை அவள்..!
உணர்வற்ற கவிதைக்கும் உயிர் வருகிறது, நீ ரசிக்கும் போது!
கையளவு தான் இதயமாம் அறிவியல் சொல்கிறது... பின் எப்படி சாத்தியம் நீ ஆறடி அதற்குள்?
இறுதிவரை உன்னோடு இருப்பேன் பெண்ணே! உறுதியாய் நீ என்னோடு வாழவேண்டும் என்று நினைத்தால்...
காதலி Quotes
சாயந்து பார்க்கும் உன் அழகின் சாயலை காப்பியடித்தது, சாய் கோபுரம்!
தகரப் பேருந்தும், தங்கத் தேராகும், என்னவள் ஏறிய பின்பு!
பூக்கின்ற பூ கூட உன் முன் தோற்குமடி... நான் கண்ட கனவெல்லாம் நிஜமாகி நீயானது... என் உயிரெல்லாம் ஒன்றாகி உணர்வானது...
எனக்கான உலகமனைத்திலும் உனக்கான நிமிடங்களே உறைந்து கிடக்கின்றன...
காதலிக்கு கவிதைகள்
காதல் வேண்டி நான் வளர்த்த "வேள்வித் தீயில்"இருந்து வந்த தேவதை நீ என் காதல் தேவதை!
உன்னோடு நான் இருக்கையில், என்னுள் தெரியும் இருளின் வார்த்தைகள், என் வாழ்க்கையின் மொத்த வெளிச்சமாக உன்னை பார்கிறேன்!
வளைந்து வளைந்து நடக்கையிலே, வளை குலுங்கும் ஓசையிலே, காதோரம் முடிக்கோதையிலே, கண்ணிரண்டும் மோதையிலே, கவிழ்ந்தேனே போதையிலே!
தோள்மீது நீ தலைசாய்ந்து உறங்கிடும் கணம் போதும், துயரம் யாதும் நொடியில் மறந்துபோகும்.
Quotes for Lover Tamil
அழகு என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் தந்தவளே... உன் அழகை கண்ட பிறகுதான், அதில் ஒளிந்துள்ள அர்த்தத்தை நான் அறிந்தேன்...
நான், தினமும் சிந்திப்பதே உன்னை சிரிக்க வைப்பதற்கு தானடி! உன் முகத்தில் அந்தச் சிரிப்பைக் காட்ட, என்னை ஏன் சிரமப்படுத்துகிராயடி?
எத்தனை முறை வாசித்தாலும், தூக்கம் வராத புத்தகம் நீ.
பூச்சூடிவிடு என்று சொல்லி பின்புறமாகத் திரும்பி நிற்கிறாயே, நான் பூச்சூடும்போது உன் முகம் மலர்வதை நான் எப்படிப் பார்ப்பது?
மலரோவியம் உன்முகம், வரியோவியம் உன் புன்னகை, நிழலோவியம் உன் நினைவுகள், எழிலோவியம் உன் இமையும் இருவிழியும், என்றும் நீ என் இதய ஒவியம்!
என் வரிகளுக்கு முகவரி கேட்காதீர்கள், அவள் பெயர் சொல்ல வேண்டியது இருக்கும்!
Best Quotes for Love in Tamil
ஆயுள் முழுவதும் சிறை இருக்க தயார், சிறையிருப்பு அவள் இதய தோட்டமாக இருந்தால்!
எனக்கு கடவுள் கொடுத்த வரம், உன்னை பார்க்க என் கண்களை படைத்தது மட்டும் தான் அன்பே!
பூக்களின் புன்னகையில் கொஞ்சம் வெட்கம் ஒளிந்திருப்பதை முதன் முதலாக தெரிந்து கொண்டேன், பூவே நீ சிரிக்கையில்.
சாலை எங்கும் பூக்கள் இருப்பினும், உன் பூமுகம் தேடி சென்றேன்... உன் விழிகள் பூவாக... பார்வை மகரந்தமாய் என்னை ஈர்க்கிறது... தேவதை நகல் நீயடி... உன் பார்வையாலே என்னை இழந்தேனடி...
அவளை என் கண்கள் கண்ட பின்பு தான் பெண்களே தேவதை என ஏற்றுக் கொண்டேன்... அழகுக்கு அழகான தேவதையே அவள் என அறிந்து கொண்டேன், என் தேவதையை கண்ட பிறகு தான்!
காதலி ஸ்டேட்டஸ்
தேர்வு முடிந்தபின் மதிப்பெண்ணைப் பற்றிப் பேசினேன்! என் மதி கெடுத்த பெண்ணே உன்னைப் பற்றி தான்!
கொஞ்சம் பொறுமை கொள் பெண்ணே! உந்தன் வாசத்தை அந்த பூக்களும் சூடி கொள்ளட்டும்.
சூரியன் எத்திசையோ அத்திசை பார்க்கும் சூரியகாந்தி போல், நீ இருக்கும் திசையையே என் கண்களும் பார்க்கிறதே!
பிரிவில்லா பிறவி வேண்டும்! அதில் எல்லாமே நீயாக நிறைந்திட வேண்டும்!
நான் தொலைந்தாலும், நீ துவண்டு விடாதே என்றும் உனக்கு துணையாய் நிற்பேன்! இருந்தாலும், இறந்தாலும்!
அத்தனை கோபங்களையும் சட்டென கரைத்து விடுகிறாய், உன் குறும்புகளில்!
காதலி வர்ணனை Quotes
தினம் உன் முகம் காணும் எனக்கு பௌர்ணமி காணும் ஏக்கம் இல்லையடி வெண்மதியே!
உன்னுடன் நான் கதைக்கும் ஒவ்வொரு நொடியும் என் கனவிலிருந்து மீளத் துடிக்கின்றன.
கனவோடு சிலகாலம்; நினைவோடு பலகாலம்; உன்னோடு எக்காலம் வாழப்போகிறேன் என்று தெரியவில்லை!
பூக்கள் கூட பூக்க மறுக்கிறது, நீ புன்னகைக்க மறந்தால்!
Best Tamil Kavithai for Girlfriend
உன் சிதறாத சிரிப்பில் என்னை சிதைத்துவிட்டு போகிறாயடி நீ!
வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை!
தென்னங்கீற்றின் இடையேத் துண்டாகித் தவிக்கும், நிலவின் முகம்!
தீராத நோய்களும் தீர்ந்து போகும் என் தாரகையின் அருகில்! ஆறாத காயங்களும் ஆறுதலடையும், அவள் அன்பின் அழகில்!
இதுவரையில் எவரும் குடியேறிடா என் இதய அறைக்குள், என்னைக் கேட்காமலேயே வந்து பால் காய்ச்சி விட்டாய் நீ!
அழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகி அவள். என் இதயக் கோட்டைக்கு ராணி அவள், கேரளத்தில் பூத்த புன்னகைப் பூ அவள், என் உயிரினும் மேலான, என்னவள் அவள்!
தூரத்தில் நிலா! அருகில் நீ! யாரை ரசிப்பது? குழப்பத்தில் நான்!
உன் நெற்றி முடி ஓரத்திலே என்னை கட்டிபேட்டாய், உன் புருவத்தில் என்னை புதைத்தாய், உன் காலடியில் கண்ணம் பதித்தேன், உன் காதல் தரிசனம் கிடைக்காத என்று!
ஏழு வண்ணங்கள் இருந்தால் தான் வானவில் அழகாகத் தெரியும்... ஆனால், எவ்வண்ண ஆடையிலும் என்னவள் அழகாகத் தெரிவாள்!
உன்னை ரசிக்க ஆரம்பித்தப் பின், வேறுயாரையும் எதார்த்தமாய் கூட ரசிக்கத் தோன்றவில்லை இந்த ரசிகனுக்கு!
Best Tamil Kavithai for Lover
உன்னை தவிர்ப்பதற்கு ஆயிரம் எண்ணங்கள் தேவையடி... ஆனால், உன்னை நேசிப்பதற்கு நொடி ஒன்றே அதிகமடி!Download
என்னவளின் இனிதான கருத்து, அதுவே என் இன்னல்களின் மருந்து!Download
நிலவைப் பார்த்தேன், உந்தன் நினைவு! உன்னைப் பார்த்தேன் மறந்தது நிலவு! உண்மையில் இரண்டில் எது தான் அழகு?Download
Tamil Life Quotes for Her
தீபாவளியை பட்டாசுச் சத்தங்கள் அலங்கரிப்பதை போல, என் இதயம் உன்னைப் பூக்களால் அலங்கரித்து வர்ணிக்கிறதடி அழகே!
Download
இயற்கையின் காற்றில் அசைந்தாடும் மலரின் ஓசை, நீ வரப்போகிறாய் என்கிற மணி யோசையாய் என் இதயத்தை தட்டி எழுப்புதடி!
Download
Post a Comment