Muyarchi Quotes in Tamil | முயற்சி கவிதைகள்
முயற்சி பற்றிய கவிதைகள்
முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், முயற்சியை கைவிடாதே! தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றால், தன்னம்பிக்கையை கைவிடாதே!
முயற்சி திருவினையாக்கும் கவிதைகள்
இவ்வளவு நாட்களை வீணடித்தது போதும், தொடங்குவதற்கு முயற்சியுங்கள்!
ஒரு முறை தோற்றுத்தான் பார்ப்போமே, அதற்கு முயன்றுதான் பார்ப்போமே!
வெற்றி quotes in tamil
தோழனே! உன்னை இழிக்கும் தோல்விகளே! காலப்போக்கில் உன் முயற்சிகளே, உன் சோதனைகளின் சாதனைகளே!
தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு, முயற்சியும் இருந்தால் தான் வெற்றி சாத்தியம்!
கரை தொட்டு விடும் ஆசையில், விடாமல் முயற்சிக்கின்றன கடல் அலைகள்!
முயற்சி செய்
சிறிய வெற்றி வேண்டும் என்றாலும், அதற்கு பெரிய முயற்சி தேவைப்படுகிறது!
இடைவிடாது பொழியும் மழையும், சுடர்விட்டு எறியும் தீயும், நம்பிக்கையுடன் தொடரும் முயற்சியும் ஒருநாள் பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்பாராத அளவிற்கு!
விட்டுக் கொடுக்காதே விட்டும் விடாதே... முயற்சியை!
முயற்சி கவிதை 2 வரிகள்
தோல்வியின் போதும் முயற்சியை நிறுத்தாமல் இருப்பதே, வெற்றியின் ரகசியம்.
ஏணியில் ஏறி மேலே போய் கொண்டே இரு! எட்டா தூரம் என்று ஒன்று இல்லை! விடாதா முயற்சி விஸ்வரூப வெற்றி!
சாகும்வரை வாய்ப்பு இருக்கையில், சாதிக்கும் வரை முயற்சித்து பார்!
வெற்றிக்கு வித்து முயற்சி
தூற்றுவோர் தூற்றட்டும் சிரிப்போர் சிரிக்கட்டும் முயற்சி மட்டுமே நம் இலக்காக் இருக்கட்டும்...
வெற்றியின் அர்த்தம், தொடர் முயற்சி!
பிறந்தோம், வாழ்ந்தோம் என்பதில் இல்லை வாழ்க்கை. என்ன செய்தோம் என்பதில் தான் உள்ளது; ஒரு நாள் வாழ்ந்தாலும், தன்னால் முடிந்த உயரம் பறந்து பார்க்கிறது ஈசல்; நீ செய்யும் முயற்சிகள் தான் நீ யார் என்பதையே உனக்கு புரிய வைக்கும்!
முயற்சி பற்றிய பொன்மொழிகள்
முடியும் வரை முயற்சி செய்! பிறகு அதை வலிமையாக்க, தினமும் பயிற்சி செய்!
மடுவும் மலையாகிப்போகும், முயற்சி இல்லாது போனால்...
அதிர்ஷ்டம் என்பது உன் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு!
விடா முயற்சி பற்றிய சிந்தனைகள்
வெற்றிக்காகப் போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள் - கண்ணதாசன்
முயன்று பார்த்தால், வென்று பார்க்கலாம்!
முயற்சி என்ற மூலதனம் முடியாது என்ற முட்டாள்தனத்தை அழிக்கும்; முயற்சியுங்கள் மூச்சுள்ளவரை!
Muyarchi Kavithai in Tamil Language
முயற்சி செய்து தோற்ற சந்தோஷம், வேறெதிலும் கிடைக்காது!
ஒரு முறை வெல்ல ஆயிரம் முறை முயற்சிக்கலாம். ஆனால் ஒரு முறை முயற்சிக்க ஆயிரம் முறை யோசிக்காதே.
1000 முறை முயற்சி செய். அதற்குப் பின் நீயே வேண்டாம் என்றாலும், வெற்றி உன்னை விடாது.
விடாமுயற்சி கவிதை
உன் லட்சியங்களை அடையும் வரை முயற்சியில் அலட்சியம் காட்டாதே!
எத்தனை தோல்வி வந்தாலும், முயற்சியை முன் வை; வெற்றி தன்னால் பின்னால் வரும்!
வெற்றியும் தோல்வியும் முயற்சியின் கண்களுக்கு ஒன்றே!
Post a Comment