Nila Quotes in Tamil | நிலா பற்றிய கவிதைகள்
நிலா பற்றிய கவிதைகள்
பறந்து விரிந்த நீலவானக் காட்டில், ஒற்றை நாணயம்; நிலா!
நீ தோன்றுவது இரவில் என தெரிந்தும் உன்னை காண பகலில் இருந்து காத்திருக்கும் உனது நான்!
நிலவின் அழகை, நீல வான இருள் இன்னும் அழகாய் காட்டுகிறது!
உன் அழகில் மயங்காத ஆள் இல்லையே... உன்னை ரசிக்காத நாள் இல்லையே... அழகு நிலா!
நித்தமும் நித்திரை இன்றி நீளும் இரவின் இருளில், எனக்கு துணைப்புரியும் என் நிலவே... வெண்ணிலவே!
கோடி நட்சத்திரங்கள் மின்ன, அவை கண்களுக்கு அழகாய் தெரிகிறது... ஆனால், ஒற்றை நிலவையே மனம் இரசிக்கிறது...
வீதியில் நீ நடமாடும் போது, தனக்கு ஜோடி கிடைத்து விட்டாள் என்ற சந்தோஷத்தில் மேகத்தில் மறைந்து உன்னை எட்டி எட்டிப் பார்க்கிறது அந்த நிலா!
மாதம் ஒருமுறை உன்னைக் காண வரும் நிலவு, வெட்கப்பட்டு ஒளிந்து கொள்வதற்கு பெயர் தான் "அமாவாசை"
Post a Comment