Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

One Side Love Quotes in Tamil | ஒரு தலைக் காதல் கவிதைகள்

ஒரு தலைக் காதல் கவிதைகள் | One Side Love Kavithaigal in Tamil Language

one side love quotes in tamil
சொல்லிய பின் என் காதலை நீ புறக்கணிப்பதை விட, சொல்லாமல் என் காதலை உனக்காக அர்ப்பணிப்பதே மேல்!
சொல்ல மறந்துவிட்டேன் என்பதை விட, சொல்லாமல் இருந்து விட்டேன் என்பதே நிஜம்!

ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

உன்னோடு பேச பிடித்திருக்கிறது! நீ என்னோடு மட்டும் பேசுவதும் பிடித்திருக்கிறது!
one side love proposal tamil quotes
கடற்கரையில் உள்ள மணல் துகள்களை என்ன முடிந்த என்னால், உன் மன மொழி அறிய முடியாமல் தவிக்கிறேன்!
என் காதலைக் கொட்டிதீர்க்க முடியாமல் தவிக்கிறேன்... நீ என்னை மறுப்பாய் என நினைத்து, ஒரு தலையாய் ரசிக்கிறேன்...
சொல்லாத என் காதலே விண்ணை முட்டும் அளவுக்கு உன் மேல் பைத்தியமாக உள்ளது...
tamil one side love quotes
அருகில் இருந்தும், நெருங்காத சுகம்! அது தனி சுகம்! சேர்ந்த பின் அது கிடைக்காது! இது ஒருதலைக் காதல்!
tamil one side love kavithai

One Side Love Feeling Quotes in Tamil

நீ அருகில் வரும் ஒவ்வொரு நொடியும், என் இதயத்துடிப்பு பன்மடங்கானதடி பெண்ணே!
one side love status in tamil
நாம் நேசிக்கும் நபர் நம்மை நேசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!
tamil one side love images

சொல்லாத காதல் கவிதைகள்

நீ கவனிக்காமலே கடந்து செல்வதால் உன் மீது காதல் வளர்கிறது!
என்றாவது பார்த்தால் தோன்றும் முகமாக இருக்க விருப்பமில்லை. என்றுமே பார்க்க தோன்றும் முகமாக இருக்கவே விரும்புகிறேன்
உன்னுடன் இல்லாத ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகம் போல் நீள்கிறது, என் காதலை எப்படி உணர்த்துவது என்று தெரியாததால்!
என்னை அறியாமல் உன்னை காண்கிறேன், அதையும் நீ அறியாமல் செல்கிறாயடி!
எனை அறியாமல் என்னுள் வந்த காதல், எவரும் அறியாமல் என்னுள்ளே எரிந்து போகட்டும்!
அவள் என்னவள் இல்லை என்று தெரிந்த பிறகும், அவளை நினைத்தே துடிக்கிறது என் இதயம்!
எதையோ சொல்ல முற்படும் நீயும், அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நானும், பொறுமையை இழந்த நம் தேநீரும் அனலை விடுத்து ஆடையணிந்து கொண்டது!
காற்று அடித்த காகிதத்தில் கவிதைதான் என் காதல், சேருமிடம் தெரியாமல்.

Pain One Side Love Quotes in Tamil

ஓடும் நீரில் ஓராயிரம் மீன்கள் நீந்தினாலும், தனக்கென்ற அந்த ஒரு மீனை பிடிக்க ஒற்றைக் காலில் கடுந்தவம் புரியும் கொக்கு போல், ஓராயிரம் பெண்கள் என்னைக் கடந்து சென்றாலும் எனக்கென்ற உன்னை பிடிக்கவே ஆண்டுகள் பல கடுந்தவம் புரிகிறேன். எப்போது மனம் இறங்கி வருவாயோ பெண்ணே?
கண்ணியமான காதலடி என்னுடையது, என் இதயத்திலேயே பூத்து, என் இதயத்திலேயே உதிர்ந்த, சொல்லப்படாத காதலடி, இது ஒரு ஒருதலைக் காதலடி!
ஒவ்வொரு நாட்களும் விடியும் போது, நீ என்னை காதலிப்பாய் என்ற நம்பிக்கையிலே தினமும் நான் என் கண்களை விழிக்கிறேன்!

One Sided Love Quotes in Tamil

சொல்லிவிட எண்ணும் போதெல்லாம் மனம் தள்ளி போட சொல்லுகிறது... ஒரு தலைக் காதல்!
நானும் கடல் அலையாக இருந்திருக்க கூடாதா? உன் பாதங்களை மீண்டும் மீண்டும் முத்தமிட!
என் காதலை உன்னிடம் சொல்லி, உன் வாழ்க்கையிலிருந்து மறைந்து போவதை விட, சொல்லாமல் மறைத்தலே மேல்!
இருதலைக் காதல் அழகானது என்றால், சொல்லாத ஒருதலை காதல் ஆழமானது!
வாழ்க்கையில் மிகப் பெரிய கொடுமை, நாமாகவே கற்பனை செய்து, இன்னொருவரின் மேல் அளவு கடந்த அன்பு வைப்பதே!
ரோஜா மலரை பறித்த போது, என் கையில் பாய்ந்த முள்ளின் காயம், அவள் வாங்க மறுத்த போது என் இதயத்தில் வலித்தது!
ஒருதலைக் காதலனுக்கு தெரியும், காத்திருத்தலின் வலி என்னவென்று!
என் காதலை வளர்த்துக் கொண்டே செல்கிறேன், உன் நிழலை மட்டும் பின் தொடர்ந்து...
நீ வரும் நேரம் என் நெஞ்சில் வண்ண வண்ண வானவில் கோலமிட்டு உன்னை வரவேற்க வானில் வட்டமிட்டு சுற்றி அலைகிறேனடி!
அவளுடன் பேசுகையில் என் இதயத்தில் சிட்டுக்குருவி வட்டமிட்டுப் பறக்குதே!
உன் இதழ் கவிபாட, அதை ரசிக்க என் இதயம் நீ இருக்கும் திசை அறிந்து உன்னைத் தேடி ஓடி வருதடி கவிதையே!
என்தன் சில வரிகள், அவனுக்கு மட்டுமே உரியது! ஆனால், அதை அவன் அறிவதே இல்லை...
கடந்து போகும் அவன் நிழலிடம் கேட்கிறேன், இன்னும் நெருங்கி என்னுடன் வா என்று...
காதலித்தால் சொல்லி விடுங்கள்! இல்லையெனில், உங்களுக்கு காதலிக்கத் தகுதியில்லை, விட்டு விடுங்கள்!
காற்றோடு காற்றாய் கலந்து விட வரம் கேட்டேன்! அப்போதாவது, நீ என்னை சுவாசிப்பாய் என்ற ஆசையில்!
அவள் ஆசைகள் எல்லாம் வளர்பிறையாய் என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது... என் ஆசைகள் எல்லாம் தேய்பிறையாய் என்னுள் தேய்ந்து கொண்டிருக்கிறது...
எனதருகில் நீ வரும் நேரத்தில், பேச நினைத்த‌ வார்த்தைகள் எல்லாம் தூரமாகுதடா!
அடைய முடியாதென தெரிந்தும், ஆசையை மட்டும் ஏன் எழுதினான் பிரம்மணும் இந்த ஏழையின் விதியில்...
அவள் யார் என்று கேட்கிறார்கள் என்னிடம்... நான் எப்படி சொல்வது அவள் தான் என் வருங்கால மனைவி என்று...

Close