Paarvai Quotes in Tamil | அவள் பார்வை கவிதைகள்
அவள் பார்வை கவிதைகள் - Paarvai Kavithai in Tamil
கவிதை எழுத உன் பார்வை மட்டும் போதும் எனக்கு!
என் இதயத்தைத் துளைக்க தோட்டாக்கள் தேவையில்லை, உன் ஒற்றைப் பார்வை போதுமடி!
வெட்கம் முதல், மௌனம் வரை அனைத்தையும் மொழிபெயர்த்து விடுகிறது; அவளது ஒற்றை பார்வை!
உன் பார்வை துளி பட்டு சிதறிய என் நெஞ்சம் துடிக்குதடி, மீண்டும் இணைவோமா என்று!
உன் புன்னகை, ஒரு நொடியில் என் இதயத்தை வென்றது! உன் பார்வையோ, மறு நொடியே என்னை உயிரோடு கொன்றது!
அதென்ன அப்படி ஒரு பார்வை? பேய்க்கு என்மேல் இருக்கும் இரக்கம்கூட உனக்கு இல்லாமல்!
அவளின் ஒவ்வொரு பார்வையும் தான் என்னை ஒவ்வொரு நாளும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
பேருந்து நெரிசலில் அவள் சுழல விட்ட பார்வையில், சிக்கிச் சின்னாபின்னாமானவனில் நானும் ஒருவன்!
வர்ணிக்க முடியாத மாயை... அழகைக் கூற வார்த்தை வந்தாலும், இமைகள் திறந்து மெய் மறக்க வைக்கிறாள், மிரட்டல் பார்வையில்...
மின்னல் தான் பார்வையை பறிக்கும்; ஆனால், உன் அழகிய பார்வை, மின்னலையே பறித்துவிடுகிறது!
உன் அழகிய பார்வையால், சில சமயம் எனக்கு உயிர் கொடுக்கிறாய்... பல சமயம் என் உயிரை எடுக்கிறாய்!
அவள் என்ன கண்ணகியின் மறு உருவமா? பார்த்தப் பார்வையிலேயே பற்ற வைக்கிறாள்!
நின்று போன இதயம் கூட துடித்து விடும்... நீ நின்று பார்க்கையில்!
சாளரம் தாண்டி தெறித்து விழும் சாரல் மழையாக அவள் பார்வை...
ஒவ்வொரு முறை எனை நீ பார்க்கும் போதும், இலை மேல் விழும் மழைத்துளிப் போல் உடைந்து போகிறேன்!
அவள் பார்வை பற்றிய கவிதை வரிகள்
விருந்தளிக்கும் உன் விழிகளும், மாறாய் மருந்தளிக்கும் மந்திரப் பார்வையும் எங்குதான் மறைத்து வைக்கிறாயோ என்னை காணும் வரையில்...
பாவை உந்தன் பார்வை என்னை பனியாய் உருக்க, கன்னி உந்தன் கன்ன குழியில் தடுக்கி விழுந்தேன் நானும்!
தென்றலும் தீண்டவில்லை; குளிர் மழையும் என்னைத் தொடவில்லை. ஆனாலும் சிலிர்த்தேன், உன் காதல் பார்வை என் மேல் விழுந்ததால்!
என்னவள் பார்வை கவிதை
அவளின் இரு விழி பார்வையில் பம்பரம் போல், அவளை சுற்றியே என் நினைவுகள் வட்டம் அடிக்கிறது எப்போதும்!
அவளின் பார்வை எனை இயக்கும் இயற்பியலின் இயக்குவிதி; அவளின் சிரிப்பு எனை ஈர்க்கும் இயற்கையின் ஈர்ப்புவிதி!
Paarvai Kavithai in Tamil
அவளின் பார்வையும் மின்னலைப் போலவே! சற்றென்று பலரின் பார்வையைப் பறிக்கும்!
அழகிய பொம்மை என நினைத்து கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன், நீ கண் சிமிட்டிய அந்நொடியில் கண் சிமிட்டா பொம்மையானேன் நான்!
பார்வை Quotes
ஒரு முறை என்னை பார்த்துக் கொண்டு செல்கிறாய் நீ.. அந்த ஒற்றை பார்வையை நொடிக்கு நூறு முறை நினைத்துக் கொண்டே செல்கிறேன் நான்.
காந்தப் பார்வை கவிதை
வானத்தின் நிறத்தை ஆடையாக அணிந்தவளே உன்னை தொட்டு அள்ளி பூசிக்கொள்ள தான் ஆசை. ஆனால் நீ பார்த்த பார்வையால் தானே தள்ளி நானும் தள்ளி நின்றேன்.
ஒற்றைப் பார்வை கவிதை
கொள்ளையடித்து செல்கிறாய், காந்த பார்வை கொண்டு என் இதயத்தை.
Un Paarvai Tamil Kavithai
காலம் மாறுகிறது; ஆயுள் மாறுகிறது; வருடம் மாறுகிறது; ஏன் நாட்களும் மாறுகிறது. ஆனால் நீ பார்த்த அந்த ஒரு நொடி பார்வை மட்டும் என் மனதில் இன்னும் மாறவில்லை!
ஓர விழிப் பார்வை கவிதை
என் கனவு அனைத்தையும் களவாடினாய், உன் ஓரப் பார்வையால்!
உன்னுடைய ஒரு நிமிட விழிப் பார்வையில், என்னுள் ஒராயிரம் நட்சத்திரங்கள் மின்னுகின்றதே!
புயலைவிட வேகமாக தாக்குகிறது உன் பார்வை. கொஞ்சம் தாழ்த்திக்கொள்; நான் நிலையாக நிற்க! தீட்டிய கத்தியைவிட, தீண்டும் உன்பார்வை கூர்மையாகவே தாக்குகிறது!
Look Quotes in Tamil
ஆயிரம் வார்த்தைகள் உணர்த்தா காதலை, அவள் ஒற்றைப் பார்வை உணர்திவிட்டது...
Post a Comment