Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Pengal Kavithai in Tamil

ஆணினது மனக்கிளையில் தானாய் ஒட்டிக் கொண்டு, வாழ்வுதனை தேனாய் இனித்திடச் செய்திடும் தேனீனமாம் எம் பெண்ணினம்...
எந்த ஒரு பெண்ணும் அழகானவனை தேடுவதில்லை! எந்த நிலையிலும் அழாமல் பார்த்துக் கொள்பவனையே தேடுகிறாள்!
-
ஓர் உயிரை படைத்தளிக்கும் பெண்ணில் ஒற்றை ஆற்றலுக்கு முன், உலகின் சகல திறமைகளும் தோற்றுப் போகும்!
-
ஒரு பெண் சந்தோசமாக இருக்கும் போது மிகவும் அழகாக தோன்றுவாள். அந்த பெண்ணை சந்தோசமாக வைத்திருக்கும் ஒரு ஆண் அவளை விட அழகாக தெரிவான்.
-
கேளடி பெண்ணே! நீ தேய்பிறை அல்ல வளர்பிறை என்பதை மறவாதே.!
-
பெண்ணாய் பிறந்துவிட்டோமே என எண்ணி துவண்டுவிடாதே. துணிந்து நின்றால் துக்கமும் தூக்கிலேறும்.
-
பெண் என்பவள் வளைந்து கொடுத்து செல்வதால் யாவரும் கால் நனைக்கும் "நதி" அல்ல! எத்தனைக் கரங்கள் உயர்ந்தாலும், தொட்டு விட முடியாத "மதி" ஆவாள்!
-
உடலளவில் பெண் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் அவளது வலிமையினை மிஞ்ச யாராலும் முடியாது!
-

Close