Yekkam Quotes in Tamil | ஏக்கம் கவிதைகள்
அன்பு ஏக்கம் கவிதைகள் | Yekkam Kavithaigal in Tamil
காதல் ஏக்கம் கவிதை வரிகள்
கிடைக்காது எனத் தெரிந்தும் கிடைக்காதா என்று கிடைக்காத ஒன்றிடம் மன்றாடி தவிக்கிறது மனம்!
அடைமழையிலும் தீராத தாகங்கள், தனிமையின் ஏக்கங்கள்!
என் வாழ்க்கை கதை உன்னில் தொடங்கி, உன்னில் முடிந்திடாதா என்ற ஏக்கம்!
Yekkam Tamil Kavithaigal
இனி பேசிடவே கூடாதென உன் அலைபேசி எண்ணினை அழித்திட்ட பின் வரும் பெயரில்லா அழைப்புகள் யாவும் நீயாக இருக்கக்கூடாதா என ஏங்க வைக்கின்றன!
அவசரப்பட்டு யார் மீதும் அன்பு வைத்து விடாதீர்கள்! வேண்டாம் என்று நாம் விலகிச் செல்லும் போது நெருக்கமாகப் பழகியவர்கள், வேண்டும் என்று ஏங்கும் போது விலகிச் செல்வார்கள்!
உன்னோடு வாழ்வதற்கு என் நொடிகள் எல்லாம் ஏக்கம் கொள்கிறது... எங்கே என் என்னவள் என்று!
பெண்ணின் ஏக்கம் கவிதை
இழந்து விடுவோமோ என்ற பயம்தான் சிலரை ஏற்கவும் மறுக்கிறது!
Post a Comment