Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Amma Ninaivugal Quotes in Tamil

வாழ்வை சொல்லிக்கொடுக்கும் அம்மா, அவள் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதை மட்டும் கடைசிவரை சொல்லிக் கொடுக்கவே இல்லை!
அம்மா இல்லாத உலகத்தில் வாழும் போது தான் புரிகிறது, அம்மா தான் உலகம் என்பது!
நிலவும் இருக்கிறது. சோறும் இருக்கிறது. ஆனால், ஊட்டி விட அம்மா இல்லை சிலருக்கு!
என் உலகம் மட்டும் சூரியன் உதித்த பின்பும் இருட்டாகவே இருக்கிறது. அம்மா இல்லாததால்!
ஆயிரம் உறவுகளை நாம் இழந்தாலும், அம்மாவை இழக்கும் போதே உயிர்பிரியும் வலி புரியும்!
தாயின் மடியும், அவள் அடித்த அடியும் சொர்க்கம் என்று தெரியும்! அவள் மறைந்த பின்பே, இது புரியும்!
"சாப்பிட்டாச்சா" என்று யாராவது கேட்டால் கண்கள் கலங்குகிறது! இதயம் வலிக்கிறது! அம்மாவின் ஞாபகம் வருகிறது! தாயை இழந்தவர்களுக்கு!
எத்துணை வயதானாலும் வலிக்கும் போதெல்லாம் உன்னை அழைக்கிறது, என் உதடுகள் என்னை அறியாமலேயே "அம்மா"

Close