Love Conversation Quotes in Tamil
உன்னிடம் பேச கவிதை
எவ்வளவு பேசினாலும், உன்னுடனான எனது உரையாடல்கள் மட்டும் ஒருபோதும் முடிவடைவதே இல்லை!
நெடுநேரம் பேசியும் நிறைவடையாத உரையாடல் என்றால், அது உனக்கும் எனக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் தான்!
அரத்தமில்லாத பேச்சு தான், பல அழகிய உறவுகளை உருவாக்குகிறது!
நேற்று என் வாழ்க்கையில் தனிமையை மட்டும் நேசித்த நான், இன்று உன் அழகிய விழிகளையும் நேசிக்கிறேன் நீ பேச ஆரம்பித்த அந்த நொடி முதல்!
-
அத்தனை கோவமும் தணிந்து விடுகிறது, உன்னுடன் கதைக்கும் அக்கணமே!-
உன்னோடு கதைக்கும்போது மட்டும் என் கவலைகள் எல்லாம் சிறகடித்துப் பறந்து விடுகின்றன!
-
உன்னிடம் பேசாமல் அந்த நாள் நிறைவடைவதில்லை!
-
நீ என்றோ அனுப்பிய குறுஞ் செய்தியை படித்துக் கொண்டு இருக்கிறேன்! இப்போது போலவே, உதட்டில் ஒரு புன்னகை கடந்து செல்கிறது!
-
எத்தனையோ பேசிய, எத்தனையோ வாதாடிய இதழ்கள் ஏனோ, மௌனம் தழுவின... நாம் ஒன்றாய் சந்தித்த போது...
-
கடைவீதிக் கடையில் மீதி சில்லறையைக் கூட கேட்க தயங்குவேன்! உன்னிடம் பேசும் போது மட்டும், சகல மொழிகளும் சரளமாய் வருகிறது!
-
விடாமல் பேசும் உன்னை, விட்டுக் கொடுக்காமல் பேசுவதில் எனக்கோர் அலாதி இன்பம்!
-
மண்ணோடு நான் போகும் வரை, உன்னோடு பேசிய நாட்கள் என் கண்ணோடு நிற்கும்!
-
மணிக்கணக்காக பேசவில்லை! சில மணித்துளிகள் என்றாலும், மனதோடு பேசிக்கொண்டோம்!
-
பொழுதெல்லாம் உன்னோடு உரையாடல் வேண்டும்; பொழுது சாய்ந்தால் உன் மார்பில் இடம் ஒன்று வேண்டும்; கண்ணீர் விட்டால் அணைத்துக்கொள்ள என் அருகில் நீ வேண்டும்; காயம் ஆனாலும் மருந்தாய் நீ மாறிடனும்!
-
அழைபேசி சிணுங்கும் முன், அழைப்பது நீதான் என அறிந்து, அலைபாய்ந்து சிணுங்கும் மனதிடம் எத்தனை முறை கூறுவேன் அலையாதே என்று!
-
உன்னையே பிடித்துவிட்ட பிறகு, உன்னிடம் பிடிக்காதது என்று எதுவும் இல்லை...
Post a Comment