100+ Sad Night Quotes in Tamil | இரவு சோகக் கவிதைகள்
சோகமான இரவு கவிதை வரிகள்
இரவுகளைத் தொலைத்த அனைவரும், சத்தியமாக யாரிடமோ இதயத்தையும் தொலைத்திருப்பார்கள்!
உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும், என் உறங்காத இரவுகளுக்கு மட்டும்தான் தெரியும், உன்னை, எவ்வளவு நேசிக்கிறேன் என்று...
சோகமோ, சந்தோசமோ எதுவாக இருந்தாலும் இரவு அதைப் பன்மடங்காக்கி விடுகிறது...
ஒவ்வோருநாள் கனவுகளிலும் தவறாமல் வந்து, தவணை முறையில் என் இரவுகளை வாங்கிச் செல்கிறாள்!
சுமைதாங்கியாய் இரவுகள்! கண்களில் கண்ணீரையும், மனதில் கவலைகளையும்!
நிலவு இல்லாத இரவுகளைப் போல, என் வாழ்வும் இருள் சூழ்ந்தது நிலா அவள் இல்லாததால்!
பகல் நேரங்களில் இருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் ஏனோ இரவு நேரங்களில் இருப்பதில்லை! நிசப்தமும், நித்திரையும் இருந்த நாட்களைவிட, கண்ணீரும் கம்பலையுமாய் இருந்த நாட்கள் அதிகம்!
என் இரவுகளையும், என் இதயத்தையும் எடுத்துச் சென்று வாட்டி வதைக்கிறாய்!
எதற்காக யோசிக்கிறேன் என்று தெரியாமலேயே, எதையோ யோசிக்கிறேன் இரவு முழுக்க!
இரவுகளில் தேய்வது நிலவு மட்டுமல்ல. நினைவுகளில் உருகும் இரு இதயங்களும் தான்!
நிலவின்றி இரவிருந்தாலும், உன் நினைவின்றி துடிப்பதில்லை என் இதயம்!
என் இரவையும் பகலாக மாற்றிய நீ, இன்று என் பகலையும் இரவாக மாற்றிவிட்டு எங்கே சென்றாயடி?
ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நான் மட்டும் உறங்காமல் உன்னையே நினைத்துக் கொண்டிருப்பது ஏனோ?
நீ என்னருகில் இல்லாத ஒவ்வொரு நாட்களும், நிலவு இல்லாத வானம் போல நோகுதடி!
கவலைக்கு என்மீது காதல் வந்தது; ஒரு இரவு கூட பிரியாமல் என்னைக் கொன்றது!
என்னிரவும் பகலானது அவளது வருகையை எதிர் நோக்கியதால்!
Post a Comment